இந்தியா

மகாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்தி தான்- முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

Published On 2025-03-06 15:45 IST   |   Update On 2025-03-06 15:45:00 IST
  • மும்பையில் வாழ மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று RSS தலைவரின் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
  • RSS தலைவரின் கருத்துக்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ் காட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பையாஜி ஜோஷி, "மும்பையில் ஒரு மொழி பேசுபவர்கள் மட்டும் கிடையாது. இங்கு ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு மொழிகளை பேசுபவர்கள் இருக்கிறார்கள். காட்கோபர் பகுதி மக்கள் குஜராத்தி பேசுகிறார்கள். ஆதலால் நீங்கள் மும்பையில் வசித்தால் மராத்தி மொழி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.

இதே நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோபா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

மராத்தி குறித்து சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்த கருத்துக்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ் காட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி கருத்து தொடர்பாக பாஜக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஜாதவ் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு சட்டமன்றத்தில் பதில் அளித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசியதை நான் கேட்கவில்லை. மகாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்தி தான். இங்கு உள்ள ஒவ்வொருவரும் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் அரசாங்கம் அனைத்து மொழிகளையும் மதிக்கிறது.

நீங்கள் உங்கள் சொந்த மொழியை நேசித்து மதிக்கிறீர்கள் என்றால், மற்ற மொழிகளையும் அவ்வாறே நேசிப்பீர்கள். இந்த கருத்தில் சுரேஷ் பையாஜி என்னுடன் உடன்படுவார் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News