இந்தியா (National)

'சட்டையை இன் பண்ணிட்டு வரமாட்டியா..' 6 ஆம் வகுப்பு மாணவனை காது சவ்வு கிழிய விளாசிய ஆசிரியர் - வீடியோ

Published On 2024-10-06 16:33 GMT   |   Update On 2024-10-06 16:34 GMT
  • வகுப்பறை உள்ளே நுழைந்த ஆசிரியர் அந்த மாணவனைக் கூப்பிட்டு சட்டையை ஏன் டக்-இன் செய்யவில்லை என்று கேட்கிறார்.
  • போலீஸ் முன்னிலையிலே ஆசிரியரை சிறுவனின் பெற்றோர் தாக்கினர்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தனியார் பள்ளியொன்றில் 6 வகுப்பு மாணவன் [11 வயது] சட்டையை இன்- பண்ணி வரவில்லை என்று ஆசிரியர் சரமாரியாகத் தாக்கியுள்ளார். கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், வகுப்பறை உள்ளே நுழைந்த ஆசிரியர் அந்த மாணவனைக் கூப்பிட்டு சட்டையை ஏன் டக்-இன் செய்யவில்லை என்று கேட்கிறார். அந்த சிறுவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியர் சிறுவனை கன்னத்தில் அறைந்து சரமாரியாகத் தாக்கியது பதிவாகியுள்ளது.

அன்றைய தினம் வீட்டுக்கு வந்த சிறுவன் நடந்ததை பெற்றோரிடம் கூறிவே உடனே மருத்துவமனைக்கு அவனை அழைத்து சென்றுள்ளனர். அங்கு நடந்த மருத்துவப் பரிசோதனையில் சிறுவனின் செவிப்பறை [eardrum] நிரந்தரமாகச் சேதமடைந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஆசிரியர் மீது புகார் அளித்தும் பள்ளி நடவடிக்கை எடுக்காததை அடுத்து போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் போலீஸ் முன்னிலையிலே ஆசிரியரை சிறுவனின் பெற்றோர் தாக்கினர்.இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது.

Tags:    

Similar News