இந்தியா

SSLC தேர்வில் 90,000 பேர் இந்தியில் ஃபெயில் - மும்மொழி கொள்கையை விமர்சிக்கும் கல்வியாளர்கள்

Published On 2025-03-21 13:22 IST   |   Update On 2025-03-21 13:22:00 IST
  • இந்தியில் 90,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி.
  • எதற்காக மூன்றாம் மொழியாக இந்தியை கட்டாயப்படுத்துகிறது.

கர்நாடகாவில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) தேர்வில் மூன்றாம் மொழிப்பாடமான இந்தியில் 90,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

மும்மொழிக் கொள்கையை நிறைவேற்றுவதற்காக பல மாநிலங்களில் இந்தி மூன்றாவது மொழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அது மாணவர்களின் அறிவுக்கு பங்களிக்கவோ, அவர்களின் எதிர்காலத்திற்குப் பயனுள்ளதாகவோ இல்லை என்பதையே இந்த முடிவு எடுத்துக் காட்டுவதாக கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர்.

மேலும், மாநில அரசு மாணவர்களின் எதிர்கால நலனில் தொடர்புடைய ஒன்றை தேர்வு செய்ய அனுமதிக்காமல், எதற்காக மூன்றாம் மொழியாக இந்தியை கட்டாயப்படுத்துகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மூன்றாவது மொழியாக இந்தியை கற்பதால் ஏற்படும் கூடுதல் சுமையால், தாய்மொழி மற்றும் இரண்டாம் மொழியான ஆங்கிலத்தை கற்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. அரசாங்கம் கன்னடம் மற்றும் ஆங்கிலக் கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அதுவே அவர்களின் கல்வி மற்றும் தொழில்முறை சார்ந்த எதிர்காலத்திற்கு இன்றியமையாததாக இருக்கும் என்று பேராசிரியர் நிரஞ்சனாராத்யா வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News