இந்தியா

மதுரை எய்ம்ஸ்: இதுவரை 26 சதவீத பணிகள் நிறைவு- மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் தகவல்

Published On 2025-03-21 17:56 IST   |   Update On 2025-03-21 17:56:00 IST
  • ரூ.2021.51 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு தற்போது வரை ரூ.239.27 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதியை விடுவிப்பதில் எந்த காலதாமதமும் இல்லை என்றும் 26 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் யாதவ் பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

மேலும், " ரூ.2021.51 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு தற்போது வரை ரூ.239.27 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானை சேர்ந்த நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி திட்டத்தை 2026 அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

Tags:    

Similar News