இந்தியா

வாக்குகள் துண்டாடப்படுவதை தவிர்க்கவும்: வாக்காளர்களுக்கு உமர் அப்துல்லா வலியுறுத்தல்

Published On 2024-09-18 05:56 GMT   |   Update On 2024-09-18 05:56 GMT
  • காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏராளமான சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
  • அவர்களின் எண்ணம் வாக்குகளை பிரிப்பதுதான். மக்கள் அவர்களுடைய வாக்குகள் துண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏராளமான சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களின் எண்ணம் வாக்குகளை பிரிப்பதுதான். மக்கள் அவர்களுடைய வாக்குகள் துண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும் என தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லா வாக்களர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் 24 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேசிய மாநாடு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா கூறியதாவது:-

ஏராளமானோர் சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள் என்பதை மக்கள் மனதில் வைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களில் அதிகமானோர் காஷ்மீரில் உள்ளனர். இது வாக்குகளை துண்டாக்கவும், மக்களை பிரிப்பதற்கான முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த விசயத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் என நம்புகிறேன். இந்த தேர்தலில் வாக்குகள் துண்டாடப்படுவதை தவிர்க்கவும்.

தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கரிஸ் கட்சி கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம். இருந்தபோதிலும் வாக்காளர்கள் அதை முடிவு செய்வார்கள். எங்களுடைய திட்டங்களை ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News