இந்தியா (National)

மன்னிப்பு கேட்ட கார்த்தி.. வாழ்த்து சொன்ன பவன் கல்யாண்

Published On 2024-09-24 16:32 GMT   |   Update On 2024-09-24 16:32 GMT
  • அனைவரும் கவனமாகக் கையாள வேண்டியது அவசியம்.
  • இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரவே விரும்பினேன்.

சினிமா சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கார்த்தியின் பிரபல காமெடி காட்சியான கண்ணா லட்டு தின்ன ஆசையா காமெடியின் புகைப்படத்தை திரையில் போட்டு காண்பித்து கார்த்தியிடம் லட்டு வேண்டுமா என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு கார்த்தி, "லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம். எனக்கு லட்டே வேண்டாம் 'என கூறினார்.

இதற்கு பவன் கல்யாண் கண்டனம் தெரிவிக்க, உடனே நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரினார். இந்த நிலையில், நடிகர் கார்த்திக்கு பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்தார்.



இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "உங்கள் அன்பான உணர்வையும் விரைவான பதிலையும், எங்கள் மரபுகளுக்கு நீங்கள் காட்டிய மரியாதையை நான் மனதாரப் பாராட்டுகிறேன். திருப்பதி மற்றும் அதன் உயர்வான லட்டுகள் போன்ற நமது புனிதத்தன்மை பற்றிய விஷயங்கள் கோடிக் கணக்கான பக்தர்களின் ஆழ்ந்த உணர்ச்சிகளை கொண்டுள்ளன. மேலும் இதுபோன்ற தலைப்புகளை நாம் அனைவரும் கவனமாகக் கையாள வேண்டியது அவசியம்."

"எந்த நோக்கமும் இல்லாமல் இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரவே விரும்பினேன். மேலும் நிலைமை தற்செயலாக இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். பொது நபர்களாக நாம் ஒற்றுமை மற்றும் மரியாதையை வளர்ப்பது மற்றும் நமது கலாச்சாரம், ஆன்மீக விஷயங்களுக்கு மரியாதை அளிப்பது நம் பொறுப்பு. சினிமா மூலம் தொடர்ந்து ஊக்கமளிக்கும் அதே வேளையில் இந்த விஷயங்களை உயர்த்த எப்போதும் பாடுபடுவோம்."

"அர்ப்பணிப்பும் திறமையும் கொண்டு சினிமாவை வளப்படுத்தி வரும் நடிகர்களாக உங்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கும், சூர்யாவுக்கும், ஜோதிகா மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் குழுவினர் அனைவருக்கும் மெய்யழகன்/ சத்யம் சுந்தரம் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். இந்தப் படம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கட்டும்," என்று குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News