இந்தியா

தேர்தலின்போது ரூ.12 கோடி செலவு செய்தேன் எனக் கூறிய என்.சி.பி. எம்.எல்.ஏ.: பின்னர் அடித்த யு-டர்ன்

Published On 2025-03-11 20:49 IST   |   Update On 2025-03-11 20:50:00 IST
  • வேட்பாளர்கள் அதிக அளவில் பணம் செலவழித்து தேர்தலில் வெற்று பெறுகின்றனர்.
  • கடந்த தேர்தலில் ஒரு வேட்பாளர் 45 கோடி ரூபாய் செலவிட்டதாக மக்கள் கூறினர்.

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலின்போது 10 கோடி முதல் 12 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. பேசிய வீடியோ வைரலாகி கேள்வியை எழுப்பிய நிலையில், லட்சம் என்பதை கோடி என தெரிவித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

பீட் மாவட்டத்தின் மஜல்கயான் தொகுதியில் இருந்து 4 முறை எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரகாஷ் சொலாங்கே. இவர் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்:-

வேட்பாளர்கள் அதிக அளவில் பணம் செலவழித்து தேர்தலில் வெற்று பெறுகின்றனர். கடந்த தேர்தலில் ஒரு வேட்பாளர் 45 கோடி ரூபாய் செலவிட்டதாக மக்கள் கூறினர். மற்றொரு வேட்பாளர்கள் 35 கோடி ரூபாய் செலவழித்ததாக நான் அறிந்தேன். எனினும் என்னுடைய செலவு 10 கோடி முதல் 12 கேபாடி வரைதான்.

தேர்தலில் வெற்றிபெற பணம் இருக்க வேண்டிய அவசியமில்லை. அரசியலில் சாதாரண மக்களின் நம்பிக்கை, வளர்ச்சிப் பணிகள் மற்றும் சாதாரண மக்களுக்கு நீதி ஆகியவை முக்கியம், பணம் என்பது இரண்டாம் பட்சம்தான்.

பிரகாஷ் சொலாங்கே பேசுவதுபோல் இடம் பெற்றுள்ளது.

தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் 40 லட்சம் ரூபாய் வரைதான் செலவழிக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் இவர் 12 கோடி வரை செலவழித்ததாக சொல்கிறாரே? என கேள்வி எழுப்பப்பட்டது.

உடனே, "நான் லட்சம் என சொல்ல விரும்பினேன். ஆனால் கோடி எனச் சொல்லிவிட்டேன். கட்சி எனக்கு தேர்தல் செலவிற்காக 40 லட்சம் ரூபாய் கொடுத்தது. ஆனால் அதில் 23 லட்சம் ரூபாய் செலவழித்தேன். மீதி பணத்தை திருப்பி கட்சியிடம் வழங்கினேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News