இந்தியா (National)

ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு.. பிரியங்காவின் பேரணி ரத்து - பாஜக சதி - காங்கிரஸ் புகார்

Published On 2024-09-29 05:00 GMT   |   Update On 2024-09-29 05:00 GMT
  • ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் அவரது பிரச்சார பேரணி தடைப்பட்டது.
  • 'பிரியங்கா காந்தியின் பேரணி பாஜகவின் நாசகர வேலையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது'

காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள பிலாவரா மற்றும் பிஷ்னா தொகுதிகளில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் மற்றும் வேட்பாளருமான மனோகர் லால்க்கு ஆதரவு திரட்ட கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா வர ஏற்பாடு செய்திருந்தனர். பிரியங்கா வந்த ஹெலிகாப்டர் தரையிறங்க இயலாததால் இந்நிகழ்ச்சிகள் தடைப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதவின் இரண்டு கட்டங்கள் முடித்துள்ள நிலையில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி மூன்றாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ்- என்சிபி கூட்டணி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேரணியில் கலந்துகொண்டு பிரசாரம் செய்ய காஷ்மீர் வந்த நிலையில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்றைய தினம் காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள பிலாவரா மற்றும் பிஷ்னா தொகுதிகளில் பிரசாரம் செய்ய பிரியங்கா காந்தி ஹெலிகாபட்டரில் புறப்பட்டு வந்த நிலையில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் அவரது பிரச்சார பேரணி தடைபட்டு இறுதியில் ரத்து செய்யப்பட்டதுஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு.. பிரியங்காவின் பேரணி ரத்து - பாஜக நாசகர வேலை - காங்கிரஸ் புகார்

பிரியங்கா காந்தியை பேரணியில் பங்கேற்க விடாமல் பாஜக திட்டமிட்டு அனுமதி மறுத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரவீந்தர் சர்மா, பிரியங்கா காந்தியின் பேரணி பாஜகவின் நாசகர வேலையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணவத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News