இந்தியா

வைரலான தெருவோர வியாபாரியின் ரொட்டி தயாரிப்பு

Published On 2024-01-05 10:10 GMT   |   Update On 2024-01-05 10:10 GMT
  • கொல்கத்தாவை சேர்ந்த தெருவோர வியாபாரி ஒருவர் ‘பிடாய் பராத்தா’ என அழைக்கப்படும் ரொட்டி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது.
  • இறுதியில் சூடான ரொட்டி தயாரானதும், அதனுடன் கொண்டை கடலை கலந்த கலவையும் சேர்த்து பரிமாறப்படுகிறது.

நாட்டின் முக்கிய நகரங்களில் தெருவோர கடைகளில் ஏராளமான சிற்றுண்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் சில உணவு வகைகள் தயாரிப்பு குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்துவதுண்டு.

அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கொல்கத்தாவை சேர்ந்த தெருவோர வியாபாரி ஒருவர் 'பிடாய் பராத்தா' என அழைக்கப்படும் ரொட்டி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. 'பிடாய்' என்ற சொல்லுக்கு அடித்தல் என்று கூறப்படுகிறது.

வீடியோவில் மைதா மாவை உருட்டி, வறுத்து சுவையான, மிருதுவான தன்மையை அடைகிறது. இறுதியில் சூடான ரொட்டி தயாரானதும், அதனுடன் கொண்டை கடலை கலந்த கலவையும் சேர்த்து பரிமாறப்படுகிறது.

இந்த வீடியோ வைரலான நிலையில், பயனர்கள் பலரும் 'பிடாய் பராத்தா' தயாரிப்பு முறையை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News