இந்தியா
பெலகாவியில் கார் மரத்தில் மோதி பயங்கர விபத்து- 6 பேர் உயிரிழப்பு
- ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதி விபத்து.
- அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 2 குழந்தைகள் உயிர் தப்பியது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கிட்டூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 2 குழந்தைகள், சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளனதாக கூறப்பட்டுள்ளது.