கிரிக்கெட் (Cricket)
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து பேட்டிங் தேர்வு
- இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
- முன்னதாக இரு அணிகள் மோதிய லீக் சுற்றுப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனினும், ஐ.சி.சி. இறுதிப் போட்டி என்பதால் நியூசிலாந்து அணியுடனான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக இரு அணிகள் மோதிய லீக் சுற்றுப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது