ஐ.பி.எல்.

மும்பை இந்தியன்ஸ் ஒரு கல்வி நிறுவனம் போன்றது: சூர்யகுமார் யாதவ்

Published On 2025-03-08 20:23 IST   |   Update On 2025-03-08 20:23:00 IST
  • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நீங்கள் வரும்போது, அது உங்களுக்கு கல்வி நிறுவனம் போன்றது.
  • நீங்கள் வருவீர்கள். கற்றுக் கொள்வீர்கள். வளர்ச்சி அடைவீர்கள்.

ஐபிஎல் 2025 சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. 10 அணிகளில் இதில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் மும்பை இந்தியன்ஸ் முன்னணி அணிகளில் ஒன்று. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அந்த அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.

10 அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து சூர்யகுமார் யாதவ் கூறுகையில் "மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நீங்கள் வரும்போது, அது உங்களுக்கு கல்வி நிறுவனம் போன்றது. நீங்கள் வருவீர்கள். கற்றுக் கொள்வீர்கள். வளர்ச்சி அடைவீர்கள். இந்திய அணியில் விளையாடுவதற்காக செல்வீர்கள்" என்றார்.

சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணி கேப்டனாக உள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி தனி தொடக்க போட்டியில் வருகிற 23-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Tags:    

Similar News