ஐ.பி.எல்.

ஐபிஎல் 2025 : பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்

Published On 2025-03-06 21:29 IST   |   Update On 2025-03-06 21:29:00 IST
  • வரும் ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஷ்ரேயஸ் அய்யரை 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.

ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.

வரும் ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் ஷ்ரேயஸ் அய்யரை 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2025 ஐபிஎல் தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News