கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: கிறிஸ் கெயில் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி

Published On 2025-03-09 05:05 IST   |   Update On 2025-03-09 05:05:00 IST
  • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இறுதிப்போட்டி துபாயில் இன்று நடக்கிறது.
  • துபாயில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

துபாய்:

9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி இதுவரை 17 போட்டிகளில் விளையாடி 746 ரன்கள் அடித்துள்ளார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மேலும் 46 ரன்கள் அடித்தால் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இந்தப் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில் 791 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

Tags:    

Similar News