null
சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தென்ஆப்பிரிக்கா
- 38.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து இங்கிலாந்து 179 ரன்னில் சுருண்டது.
- தென்ஆப்பிரிக்கா 29.1 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் "பி" பிரிவு கடைசி லீக் போட்டி இன்று கராச்சியில் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பில் சால்ட், டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சால்ட் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேமி ஸ்மித் டக்-அவுடடில் வெளியேறினார்.
அதன்பின் சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்தது. டக்கெட் 24 ரன்னிலும், ஜோ ரூட் 37 ரன்னிலும், ஹாரி ப்ரூக் 19 ரன்னிலும், பட்லர் 21 ரன்னிலும் ஆட்டமிழக்க இங்கிலாந்து 38.2 ஓவரில் 179 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மார்கோ யான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். மகாராஜ் 2 விக்கெட்டும் லுங்கி நிகிடி, ரபாடா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஸ்டப்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரிக்கெல்டன் 27 ரன்னில் வெளியேறினார்.
இதனால் தென்ஆப்பிரிக்கா 47 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு வான் டர் டுஸ்சன் உடன் ஹென்ரிச் கிளாசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவரும் அரைசதம் விளாசினர்.
வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் கிளாசன் 56 பந்தில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டுஸ்சன் உடன் மில்லர் ஜோடி சேர்ந்தார்.
29.1 ஓவரில் 81 ரன்கள் எடுத்து தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டுஸ்சன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா "பி" பிரிவில் முதல் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 2-வது இடம் பிடித்துள்ளது.
ஏ பிரிவில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இதில் தோல்வியடையும் அணியடன் தென்ஆப்பிரிக்கா அரையிறுதியில் மோதும்.