கிரிக்கெட் (Cricket)
சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங் தேர்வு
- குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை.
- குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது.
லாகூர்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் - ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் - பி பிரிவில் இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது.
அந்த பிரிவிலிருந்து ஆஸ்திரலியா அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. 'பி' பிரிவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.