கிரிக்கெட் (Cricket)
null

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியர்கள் இல்லாத 12 பேர் கொண்ட நடுவர்களை அறிவித்த ஐசிசி

Published On 2025-02-05 16:42 IST   |   Update On 2025-02-05 16:56:00 IST
  • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 12 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
  • அவர்களில் ஆறு பேர் 2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் இடம்பெற்றிருந்தனர்.

துபாய்:

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தானிலும், துபாயிலும் நடைபெறுகிறது.

8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான 12 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அவர்களில் ஆறு பேர் 2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் இடம்பெற்றிருந்தனர்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முந்தைய சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் நின்ற ரிச்சர்ட் கெட்டில்பரோவுடன் கிறிஸ் கஃபானி, குமார் தர்மசேனா, ரிச்சர்ட் இல்லிங்வொர்த், பால் ரீஃபெல் மற்றும் ராட் டக்கர் ஆகியோர் இணைந்துள்ளனர்,

 

போட்டி நடுவர்கள் குழுவிற்கு டேவிட் பூன், ரஞ்சன் மதுகல்லே மற்றும் ஆண்ட்ரூ பைக்ராஃப்ட் ஆகியோர் தலைமை தாங்குவார்கள். பூன் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு நடுவராக இருந்தார். அதே நேரத்தில் மதுகல்லே 2013 இறுதிப் போட்டிக்கு பிறகு மீண்டும் வருகிறார். மேலும் பைக்ராஃப்ட் 2017 போட்டியிலும் இடம்பெற்றார்.

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்தியாவில் இருந்து எந்த நடுவர்களையும் ஐ.சி.சி தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவர்கள் விவரம்:-

குமார் தர்மசேனா

கிறிஸ் கஃபானி

மைக்கேல் கோ

அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்

ரிச்சர்ட் இல்லிங்வொர்த்

ரிச்சர்ட் கெட்லெபரோ

அஹ்சன் ராசா

பால் ரீஃபெல்

ஷர்புத்தோலா இப்னே ஷாஹித்

ரோட்னி டக்கர்

அலெக்ஸ் வார்ஃப்

ஜோயல் வில்சன்

போட்டி நடுவர்கள் விவரம்:-

டேவிட் பூன்

ரஞ்சன் மதுகல்லே

ஆண்ட்ரூ பைக்ராஃப்ட்

Tags:    

Similar News