ஐ.பி.எல்.

ஐ.பி.எல். போட்டிக்கு வெளிநாட்டு கிரிக்கெட் வாரியம் வீரர்களை அனுப்பக்கூடாது: இன்சமாம் உல் ஹக்

Published On 2025-03-15 04:39 IST   |   Update On 2025-03-15 04:39:00 IST
  • ஐ.பி.எல். தொடரில் உலகின் அனைத்து முன்னணி வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.
  • இந்திய வீரர்கள் மற்ற நாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிக்கு சென்று விளையாடுவதில்லை.

இஸ்லாமாபாத்:

இந்திய வீரர்களைப் பொறுத்தவரை கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வுபெற்ற பிறகே வெளிநாட்டு லீக் தொடரில் பங்கேற்க பி.சி.சி.ஐ. அனுமதி அளித்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் உலகின் அனைத்து முன்னணி வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். ஆனால் இந்திய வீரர்கள் மற்ற நாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் போட்டிக்கு சென்று விளையாடுவதில்லை.

எனவே எல்லா நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஐ.பி.எல். போட்டிக்கு தங்களது வீரர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும்.

நீங்கள் (இந்தியா) உங்களது வீரர்களை வெளிநாட்டு போட்டிகளில் விளையாடுவதற்கு விடுவிக்காவிட்டால் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஏன் அதே மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

Similar News