கிரிக்கெட் (Cricket)

50வது ஒருநாள் போட்டியில் சதமடித்த முதல் இந்தியர்: சுப்மன் கில் சாதனை

Published On 2025-02-13 02:08 IST   |   Update On 2025-02-13 02:08:00 IST
  • சுப்மன் கில் நேற்று தனது 50-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார்.
  • குறைந்த இன்னிங்சில் 2,500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அகமதாபாத்:

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 112 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்தில் 78 ரன்கள் குவித்தார். விராட் கோலி அரை சதம் கடந்து 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், சுப்மன் கில் நேற்று தனது 50-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இதில் 112 ரன் விளாசிய சுப்மன் 50-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்.

மேலும், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்சில் 2,500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

Tags:    

Similar News