விளையாட்டு (Sports)

பாரீஸ் ஒலிம்பிக்: டேபிள் டென்னிசில் ஹர்மித் தேசாய் முதல் சுற்றில் வெற்றி

Published On 2024-07-27 16:12 GMT   |   Update On 2024-07-27 16:12 GMT
  • பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் வென்றார்.
  • பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மானு பாகெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென்னும், பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹர்மித் தேசாய், ஜோர்டான் வீரர் அபோயமானுடன் மோதினார்.

இதில் தேசாய் 11-7, 11-9, 11-5, 11-5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News