தமிழ்நாடு

கனமழை- அணைகளின் நீர்மட்டம் உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2024-05-14 03:37 GMT   |   Update On 2024-05-14 03:37 GMT
  • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • வீரபாண்டி 60, அரண்மனைபுதூர் 31.2, ஆண்டிபட்டி 10.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

கூடலூர்:

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக பெரியகுளம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவானது.

தொடர் மழை காரணமாக பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணைக்கு நேற்று 100 கன அடி வந்த நிலையில் இன்று காலை 405 கன அடியாக அதிகரித்துள்ளது. 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 115.10 அடியாக உள்ளது. நீர் இருப்பு 1745 மி.கன அடியாக உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 51.48 அடியாக உள்ளது. வரத்து 197 கன அடி. சிவகங்கை பூர்வீக பாசனத்திற்காக கடந்த 4 நாட்களாக தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில் இன்று காலை 1572 கன அடிநீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2191 மி.கன அடியாக உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வரத்து 73 கன அடியாக உள்ளது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 103.81 அடியாக உள்ளது. வரத்து 40 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 65.76 மி.கன அடி.

பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கும்பக்கரை அருவியில் இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெரியாறு 24.8, தேக்கடி 6, கூடலூர் 8.8, உத்தமபாளையம் 15, சண்முகநதி அணை 16.2, போடி 14, வைகை அணை 12, மஞ்சளாறு 15, சோத்துப்பாறை 11, பெரியகுளம் 60, வீரபாண்டி 60, அரண்மனைபுதூர் 31.2, ஆண்டிபட்டி 10.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News