தமிழ்நாடு (Tamil Nadu)

விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட செம்மறி ஆடுகள்.

பக்ரீத் பண்டிகையையொட்டி குண்டடம் வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Published On 2023-06-25 04:56 GMT   |   Update On 2023-06-25 04:56 GMT
  • வாரந்தோறும் குண்டடம் சந்தைக்கு 1,500 ஆடுகள் முதல் 2ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
  • நல்ல கொம்புடன் கூடிய 30 கிலோ எடை உள்ள செம்மறிக்கிடாய் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது.

குண்டடம்:

திருப்பூர் மாவட்டம் குண்டடம் வாரச்சந்தை சனிக்கிழமை கூடும். குண்டடம், ஊதியூர், கொடுவாய், மேட்டுக்கடை, சூரியநல்லூர், பூளவாடி, பெல்லம்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து உள்ளூர் வியாபாரிகள் மூலம் செம்மறி கிடாய்கள் மற்றும் வெள்ளாடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

வாரந்தோறும் குண்டடம் சந்தைக்கு 1,500 ஆடுகள் முதல் 2ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இந்த வாரம் பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

இதுபற்றி வியாபாரி ஒருவர் கூறுகையில், பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் இந்தவாரம் அதிக அளவில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனைக்காக செம்மறிக்கிடாய்கள் கொண்டு வந்ததால் விலை கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

நல்ல கொம்புடன் கூடிய 30 கிலோ எடை உள்ள செம்மறிக்கிடாய் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. கொம்பு இல்லாத செம்மறிக்கிடாய்கள் ரூ.17 ஆயிரம் வரை விற்பனையானது. மொத்தம் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது என்றார்.

Tags:    

Similar News