தமிழ்நாடு

கோப்புப்படம் 

தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

Published On 2023-12-28 21:45 IST   |   Update On 2023-12-28 21:45:00 IST
  • தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.
  • நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 30 மற்றும் 31ம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் எடுக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News