தமிழ்நாடு

தமிழரல்லாத எல்.முருகனுக்கு மீண்டும் பதவி ஏன்?- கேள்வி எழுப்பிய சீமான்

Published On 2024-08-26 08:51 GMT   |   Update On 2024-08-26 09:23 GMT
  • தமிழிசை, நயினார் நாகேந்திரன் போன்ற தமிழர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்காதது ஏன்?
  • மத்திய அமைச்சர் பதவியை மீண்டும் எல்.முருகனுக்கு தர என்ன காரணம்?

திருச்சி:

திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழரல்லாத எல்.முருகனுக்கு மீண்டும் மத்திய இணையமைச்சர் பதவியை பாஜக கொடுத்தது ஏன்?

* தமிழிசை, நயினார் நாகேந்திரன் போன்ற தமிழர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்காதது ஏன்?

* எல்.முருகனோடு தோற்றுப்போன மற்ற பாஜக தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி தராதது ஏன்?

* மத்திய அமைச்சர் பதவியை மீண்டும் எல்.முருகனுக்கு தர என்ன காரணம்?

* அண்ணாமலை, கே.பி.ராமலிங்கம் போன்றோருக்கு மத்திய அமைச்சராக தகுதியில்லையா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

Similar News