தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-01-02 11:12 IST   |   Update On 2024-01-02 12:15:00 IST
  • பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி.
  • இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம்.

திருச்சி :

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பட்டமளிப்பு விழாவில் 33 மாணவர்களுக்கு பட்டங்களை பிரதமர் மோடி வழங்குகிறார்.

விழாவில் பங்கேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

* பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி.

* பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி.

* இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம்.

* திராவிட கொள்கையை தமிழ் நிலத்தில் முழங்கியவர் பாரதிதாசன்.

* மாணவர்களை ஊக்குவிக்க, பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

* நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 29 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

* பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்.

* புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்.

* இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேருங்கள் என மாணவர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

Tags:    

Similar News