தமிழ்நாடு

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2024-06-27 07:44 GMT   |   Update On 2024-06-27 07:44 GMT
  • 2025-2026-ல் குவிண்டால் ஒன்றுக்கு ரு. 2,500 வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது காலம் கடந்த ஒன்றாக அமையும்.
  • தமிழக அரசு, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம் என்பதை கவனத்தில் கொண்டு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்ருக்கு ரூ.130-ம் அறிவித்திருப்பது போதுமானதல்ல. அதாவது இயற்கைச் சீற்றம், பொருளாதாரமின்மை, உழவுக்கான கூலி, விதை நெல் விலை, நடவுக்கூலி, அறுவடைக்கூலி, உரம் போன்ற பல்வேறு காரணங்களால் நெல் விவசாயத்தில் முதலீடு செய்த பணம் கிடைப்பதில் சிரமம் உள்ளது.

அது மட்டுமல்ல நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,405 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,450 என்றும் கொள்முதல் செய்திட அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தி.மு.க தேர்தல் நேரத்தில் அறிவித்த குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என்பதை மூன்றாண்டு கடந்தும் நடைமுறைப்படுத்த முன்வராமல் அடுத்த ஆண்டு அதாவது 2025-2026-ல் குவிண்டால் ஒன்றுக்கு ரு. 2,500 வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது காலம் கடந்த ஒன்றாக அமையும்.

எனவே தமிழக அரசு 2024-2025 நடப்பாண்டிலேயே குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்க வேண்டும்.

மேலும் தமிழக அரசு, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம் என்பதை கவனத்தில் கொண்டு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News