தமிழ்நாடு

தீபாவளி பண்டிகை: ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

Published On 2024-06-30 07:42 GMT   |   Update On 2024-06-30 07:42 GMT
  • தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
  • ரெயில்களில் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.

சென்னை:

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் பயணத்தை அதிகம் விரும்புகிறார்கள். பஸ் கட்டணத்தை விட செலவு குறைவு மற்றும் குறித்த நேரத்திற்கான பயணம் என்பதால் ரெயிலில் பணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவர்கள் பண்டிகைக்கு முன்னதாக அக்டோபர் 28, 29, 30-ந்தேதிகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிடுவார்கள்.

ரெயில்களில் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதனால் அக்டோபர் 28-ந்தேதி (திங்கட்கிழமை)க்கான முன்பதிவு இன்று தொடங்கியது. இதையடுத்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு வேகமாக முடிந்தது. பெரும்பாலான பயணிகள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்தனர்.

இதேபோல் அக்டோபர் 29-ந்தேதி பயணம் செய்பவர்கள் நாளையும், அக்டோபர் 30-ந்தேதி பயணம் செய்பவர்கள் நாளை மறுநாளும் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

தீபாவளி பண்டிகை முன்பதிவுகளை வைத்து சிறப்பு ரெயில்கள், கூடுதல் பெட்டிகள் இணைப்பு குறித்து ரெயில்வே முடிவு செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News