தமிழ்நாடு

சென்னையில் சில இடங்களில் பலத்த மழை

Published On 2022-10-27 09:57 IST   |   Update On 2022-10-27 09:57:00 IST
  • சென்னையில் காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
  • நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பலத்த மழை.

சென்னையில் அதிகாலை முதலே கருமேகம் சூழ்ந்து இருந்தது. இதனால் மழை பெய்வதற்கான அறிகுறி இருந்து வந்தது.

மேலும், சென்னையில் இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னையில் வடபழனி, அடையாறு, மெரினா, மயிலாப்பூர், மணலி, திருவொற்றியூர், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.

நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்த நிலையில் சென்னையில் மழை பெய்து வருகிறது.

Tags:    

Similar News