தமிழ்நாடு

திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம்

Published On 2025-02-07 18:53 IST   |   Update On 2025-02-07 18:54:00 IST
  • வந்திதா பாண்டேவை மத்திய அரசு பணிக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • வந்திதா பாண்டேவை உடனடியாக மாநில அரசின் பதவியில் இருந்து விடுவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய இளைஞர் விவகாரத்துறை இயக்குனராக வந்திதா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வந்திதா பாண்டேவை மத்திய அரசு பணிக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

வந்திதா பாண்டேவை உடனடியாக மாநில அரசின் பதவியில் இருந்து விடுவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பதவி ஏற்கும் நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை மத்திய பணியில் இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பணிக்கு செல்ல வந்திதா பாண்டே விண்ணப்பித்திருந்த நிலையில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எஸ். அதிகாரி வந்திதா பாண்டேவின் கணவர் வருண்குமார் ஐ.பி.எஸ். திருச்சி டிஐஜியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News