தமிழ்நாடு (Tamil Nadu)

கூடுதல் தண்ணீர் திறப்பால் 122 அடியாக சரிந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2024-07-07 04:33 GMT   |   Update On 2024-07-07 04:33 GMT
  • வைகை அணையின் நீர்மட்டம் 52.07 அடியாக உள்ளது. அணைக்கு 846 கன அடி நீர் வருகிறது.
  • மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 819 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

கூடலூர்:

கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடி வரை தேக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வழக்கம்போல் ஜூன் 1-ந்தேதி முதல் போக நெல்சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது.

மேலும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இந்த நிலையில் தற்போது மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் 122.70 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 1200 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 52.07 அடியாக உள்ளது. அணைக்கு 846 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 819 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 120.70 அடியாக உள்ளது.

பெரியாறு 1.4, தேக்கடி 0.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News