தமிழ்நாடு

விஜயகாந்த் உடல்நிலை குறித்து ஒரே நாளில் 2 அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை

Published On 2023-11-29 10:50 GMT   |   Update On 2023-11-29 10:50 GMT
  • உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் கடந்த 18-ந்தேதி முதல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • விஜயகாந்துக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.

சென்னை:

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று மதியம் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், இன்று 2-வது முறையாக விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், விஜயகாந்த் வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார். விஜயகாந்துக்கு உள்ள சுவாச கோளாறுக்கு நிவாரணம் காணும் வகையில் டிராக்கியஸ்டமி செய்வது குறித்து மருத்துவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளது.

விஜயகாந்துக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 18-ந்தேதி முதல் ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News