தமிழ்நாடு
அமெரிக்க மக்கள் ஆவின் நெய்யை தான் விரும்புகிறார்கள்- அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்
- தமிழ்நாடு முழுவதும் 300 கூட்டுறவு நிலையங்கள் உள்ளன.
- ஆவின் பொருட்கள் கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, ஆவின் பொருட்கள் சிறிய கிராமங்களில் விற்பனை செய்ய முடியாத சூழல் உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன், தமிழ்நாடு முழுவதும் 300 கூட்டுறவு நிலையங்கள் உள்ளன. இந்த வருடம் அதிகமாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆவின் நெய் உலகத்தரம் வாய்ந்தது.
அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விலை கூடுதலாக இருந்தாலும் அமெரிக்க மக்கள் ஆவின் நெய்யை தான் விரும்புகிறார்கள். ஆவின் பொருட்கள் கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.