தமிழ்நாடு
2026 சட்டசபை தேர்தல்- நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
- அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
- கட்சியில் ஆங்காங்கே இருக்கும் பூசல்களை களைய வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
தமிழகத்திற்கு வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கி விட்டன.
இந்நிலையில் அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனையின்போது, சட்டசபை தேர்தல் பணிகளை தற்போதே தொடங்க அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அவர் வலியுறுத்தினார். மேலும் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கட்சியில் ஆங்காங்கே இருக்கும் பூசல்களை களைய வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.