தமிழ்நாடு
விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு: மத்திய உள்துறை அதிகாரிகள் 14-ந்தேதி சென்னை வருகை
- விஜய்க்கு ‘ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
- நடிகர் விஜய் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க உள்ளனர்.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் வருகிற 14-ந்தேதி சென்னை வருகின்றனர்.
அவர்கள் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க உள்ளனர்.