தமிழ்நாடு

உண்மைகளைத் திரிப்பதை நிறுத்துங்கள்- மத்திய அமைச்சருக்கு கனிமொழி பதில்

Published On 2025-03-12 07:52 IST   |   Update On 2025-03-12 07:52:00 IST
  • மத்திய அரசின் பரிந்துரை அடிப்படையில் ஏற்கமாட்டோம் என கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
  • மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக்கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக கடிதத்தில் கூறவே இல்லை.

சென்னை:

தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, இன்று மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள கடிதத்தை சுட்டிக்காட்டி கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் குழு பரிந்துரை அடிப்படையில் மட்டுமே PM SHRI பள்ளிகளை ஏற்போம் என கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பரிந்துரை அடிப்படையில் ஏற்கமாட்டோம் என கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக்கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக கடிதத்தில் கூறவே இல்லை.

தமிழ்நாட்டிற்கு எது ஏற்றுக்கொள்ளத்தக்கதோ, அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் - அதிகமாகவோ, குறைவாகவோ எதுவும் இல்லை. உண்மைகளைத் திரிப்பதை நிறுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார். 



Tags:    

Similar News