தமிழ்நாடு
தொழில்நுட்ப கோளாறு..! - சென்னை மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு
- மின்னஞ்சல் மூலம் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உடனடி உதவிக்கு, அருகிலுள்ள நிலையக் கட்டுப்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளவும்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ உதவி எண்கள் செயல்படவில்லை என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோ உதவி எண்கள் தற்காலிகமாக வேலை செய்யவில்லை. மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதுவரை customercare@cmrl.in என்ற மின்னஞ்சல் மூலம் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி உதவிக்கு, அருகிலுள்ள நிலையக் கட்டுப்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளவும். ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.