தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் கைது- ராமதாஸ் கண்டனம்

Published On 2025-02-11 05:42 IST   |   Update On 2025-02-11 05:42:00 IST
  • 100 நாட்களுக்கு மேலாகியும் இந்த இரு வாக்குறுதிகளையும் இலங்கை அரசு நிறைவேற்றவில்லை.
  • தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய அரசு பேசவேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ள இலங்கை கடற்படை, அவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

கடந்த ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளின் மீனவர்கள் நலனுக்கான கூட்டு பணிக்குழு கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. அப்போது இரு நாட்டு மீனவர் அமைப்புகளின் பேச்சுகளுக்கு விரைவாக ஏற்பாடு செய்யவேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டதை இலங்கை தரப்பு ஏற்றுக்கொண்டது. ஆனால், அதன்பின் 100 நாட்களுக்கு மேலாகியும் இந்த இரு வாக்குறுதிகளையும் இலங்கை அரசு இன்று வரை நிறைவேற்றவில்லை.

தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய அரசு பேசவேண்டும். மீனவர்கள் நலன் தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி இலங்கை அரசை, இந்தியா வலியுறுத்தவேண்டும். அதையும் மீறி தமிழக மீனவர்களுக்கு எதிரான செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டால் அதன் மீது தூதரக நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News