தமிழ்நாடு

செங்கல்பட்டில் முதலமைச்சர் ரோடு ஷோ- மக்கள் உற்சாக வரவேற்பு

Published On 2025-03-11 10:53 IST   |   Update On 2025-03-11 14:19:00 IST
  • முதலமைச்சர் நடந்து வருவதை பார்த்ததும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து அவருடன் கை குலுக்கினார்கள்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பெண்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் செங்கல்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக திருக்கழுக்குன்றம் வழியாக சென்றார்.

அப்போது காஞ்சி வடக்கு மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாட்டில் திருக்கழுக்குன்றத்தில் கட்சி நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி நெடுக நின்றிருந்த பொதுமக்களை சந்தித்தார்.

இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் திரண்டு நின்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வரவேற்றனர். பதிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரை விட்டு இறங்கி நடந்து சென்று மக்களின் வர வேற்பை பெற்றுக் கொண்டார்.

முதலமைச்சர் நடந்து வருவதை பார்த்ததும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து அவருடன் கை குலுக்கினார்கள்.

மாணவ-மாணவிகள் திரண்டு நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.

நீங்கள் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

கல்லூரி உதவித்தொகை மாதம் ரூ.1000 வழங்குவதற்கும் மாணவ-மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர். நரிக்குறவ பெண்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாசி மாலை அணிவித்து மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பெண்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சிலர் செல்பி எடுக்க திணறியபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த செல்போனை வாங்கி அவரே போட்டோ எடுத்து கொடுத்தார்.

குழந்தைகளையும் தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். சாலையின் இடது புறம் பொதுமக்கள் வழி நெடுக நின்று வரவேற்பு கொடுத்ததால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தே சென்று மக்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டார். செங்கல்பட்டு மாநகரின் எலலைக்கு வந்தபோதும் அங்கேயும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் திரண்டு நின்றிருந்தனர். மக்கள் வெள்ளத்தில் அவர் நடந்து சென்று மக்களின் வரவேற்பை பெற்றுக்கொண்டார்.

மொத்தம் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு ஷோ நடந்ததால் திருக்கழுக்குன்றம்-செங்கல்பட்டு சாலை கோலாகலமாக காட்சி அளித்தது.

Tags:    

Similar News