தமிழ்நாடு

வேல்முருகன் மீது நடவடிக்கை எடுங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-03-20 14:13 IST   |   Update On 2025-03-20 14:13:00 IST
  • வேல்முருகனின் செயல் வேதனைக்கு உரியதாக உள்ளது.
  • வேல்முருகன் இனியும் இப்படி நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டசபையில் இருக்கையை விட்டு எழுந்து வந்து சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்பியதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்ளும் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுங்கள் என்று சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் கூறுகையில்,

* வேல்முருகனின் செயல் வேதனைக்கு உரியதாக உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்ளும் வேல்முருகனின் செயல் வேதனை அளிக்கிறது என்று கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை அடுத்து சட்டசபை உறுப்பினர் வேல்முருகனுக்கு சபாநாயகர் அப்பாவு இறுதி எச்சரிக்கை விடுத்தார்.

* வேல்முருகன் இனியும் இப்படி நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News