தமிழ்நாடு
4 மாவட்ட மக்களே உஷார்... வெளுத்து வாங்கப்போகும் கனமழை
- சென்னையில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
- நாளை குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் மாவட்டங்கள், டெல்டாவில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
அதன்படி, நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* சென்னையில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
* நாளை குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
* தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 17-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.