தமிழ்நாடு

4 மாவட்ட மக்களே உஷார்... வெளுத்து வாங்கப்போகும் கனமழை

Published On 2025-03-11 13:55 IST   |   Update On 2025-03-11 14:20:00 IST
  • சென்னையில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
  • நாளை குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் மாவட்டங்கள், டெல்டாவில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

அதன்படி, நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

* விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

* சென்னையில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

* நாளை குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

* தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 17-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

Tags:    

Similar News