அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும்- மு.க.ஸ்டாலின்
- நாம் நடத்திய ஒரே ஒரு அனைத்துக்கட்சி கூட்டம் இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது.
- தொகுதி மறுசீரமைப்பு, நிதி பகிர்வு, மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு என பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* டெல்லியில் தமிழக எம்.பி.க்களின் கூட்டத்தை நடத்தி அவர்களது கருத்துகளை கேட்டு செயலாற்றிட வேண்டும்.
* ஒவ்வொரு மாநிலத்திற்கும் தலா நம் சார்பில் ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று விளக்க வேண்டும்.
* தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையில் நமக்கான உரிமையை பெற இது ஒரு தொடக்கம் தான்.
* நாம் நடத்திய ஒரே ஒரு அனைத்துக்கட்சி கூட்டம் இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது.
* ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.
* நம் கோரிக்கைகள் முழுமையாக வெற்றி அடையும் வரை இந்த போராட்டம், முன்னெடுப்பு தொடர வேண்டும்.
* தொகுதி மறுசீரமைப்பு, நிதி பகிர்வு, மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு என பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது.
* தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்க அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்று கூறினார்.