தமிழ்நாடு
FAIR DELIMITATION : மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை நியாயமற்றது - நவீன் பட்நாயக்
- நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம்.
- பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான முக்கியமான கூட்டம் இது.
சென்னை:
சென்னையில் நடைபெற்று வரும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் காணொலி மூலம் ஓடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம்.
* மக்கள் தொகையை கட்டுப்படுத்தியிருக்காவிடில் மக்கள் தொகை அதிகரித்து நாட்டின் வளர்ச்சி பாதித்திருக்கும்.
* மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது நியாயமற்றது.
* பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான முக்கியமான கூட்டம் இது என்றார்.