FAIR DELIMITATION : தொகுதி மறுவரையறை - 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்: கனிமொழி
- கூட்டுக்குழுவில் பங்கேற்று பேசிய அனைவரின் குரலும் ஒத்த கருத்துடையதாகவே இருந்தது.
- அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளை அழைத்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தீர்மானம் நிறைவேற்றம்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நிறைவடைந்தது.
இதையடுத்து தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அனைவரும் ஒத்தக்கருத்தை முன்வைத்துள்ளனர்.
* கூட்டுக்குழுவில் பங்கேற்று பேசிய அனைவரின் குரலும் ஒத்த கருத்துடையதாகவே இருந்தது.
* கூட்டு நடவடிக்கை குழுவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.
* முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுக்கு ஒத்திவைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்.
* 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியே அறிவிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்.
* பாராளுமன்ற எம்.பி.க்கள் எண்ணிக்கை தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும்.
* அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளை அழைத்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தீர்மானம் நிறைவேற்றம்.
* தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்னர் தான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிலுவைக்கு வரும்.
* பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை விரைவில் நடக்கும் என்று மத்திய அரசு கூறி உள்ளது.
* தெளிவை ஏற்படுத்தாமல் குழப்பத்தை ஏற்படுத்துவதாக மத்திய அரசின் அறிவிப்பு உள்ளது.
* அழைப்பு விடுத்ததில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டும் நேரில் பங்கேற்க முடியவில்லை, மற்ற அனைவரும் பங்கேற்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.