தமிழ்நாடு
தூத்துக்குடியில் ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
- 30 கிலோ செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணெய் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சிறிய ரக கப்பலில் கடத்தி செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணெய் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருளை மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கப்பலில் இருந்து இந்தோனேஷியாவை சேர்ந்த 2 பேர் உட்பட 9 பேர் கடத்தலுக்கு உதவிய 2 பேர் என 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.