தமிழ்நாடு
ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
- 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
- கைதானவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களை 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை இரணை தீவு கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.