தமிழ்நாடு
மேட்டூர் அனல் மின் நிலைய ஊழியர்களுக்கு ஆதரவாக த.வெ.க. ஆர்ப்பாட்டம்
- தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி த.வெ.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
- சேலம் கோட்டை மைதானத்தில் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றிக்கழகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் 1500 நபர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி, சேலம் கோட்டை மைதானத்தில் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.