உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்கள் உடல்களை அடையாளம் காண திரண்ட உறவினர்கள்

Published On 2024-05-12 10:35 IST   |   Update On 2024-05-12 10:59:00 IST
  • மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
  • அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காசா:

இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன ஆயுதக் குழுவினருக்கும் இடையே தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனது தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. கரம் ஷாலோம் எல்லை வாசலில் 4 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் ஒன்று ராணுவத்தால் அழிக்கப்பட்டது. மீதமுள்ள 3 ராக்கெட்டுகள் வெறிச்சோடிய பகுதிகளில் விழுந்தன. இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.


காசா நகரில் அல்ஷிபா மருத்துவமனை வளாகத்தில் உள்ள 3 புதைகுழிகளில் இருந்து 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.

இறந்தவர்களின் உடல்கள் அங்குள்ள ஆஸ்ப த்திரியில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த சிறுவர்கள் உள்பட பலரும் ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டு, இறந்த உறவினர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக காத்து நின்றனர்.

Tags:    

Similar News