உலகம்
அமெரிக்க அதிபர் ஜோபைடன் மனைவிக்கு மீண்டும் கொரோனா
- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தார்.
- 2-வது முறையாக அவர் கொரோனோவால் பாதிக்கபட்டு உள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடன். இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் ஜில் பைடன் டெலோவெலில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்டார். ஏற்கனவே இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தார்.
தற்போது 2-வது முறையாக அவர் கொரோனோவால் பாதிக்கபட்டு உள்ளார். ஜோபைடைனுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது.