புதுச்சேரி
முதல்-அமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்த காட்சி.
முதல்-அமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம்
- புதுவை கதிர்காமம் கதிர்வேல் சுவாமி தேவஸ்தானத்தில் பைரவர் ஜென்மாஷ்டமி விழா நடந்தது. விழாவையொட்டி யாக பூஜைகள் நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை தரிசித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் கதிர்வேல் சுவாமி தேவஸ்தானத்தில் பைரவர் ஜென்மாஷ்டமி விழா நடந்தது.
விழாவையொட்டி யாக பூஜைகள் நடந்தது. பைரவருக்கு தயிர், பால், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து பூர்ணா ஹூதி, கலசாபிஷேகம் நடைபெற்றன. பின்னர் பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பைரவருக்கு தீபாராதனை காண்பித்து சாமி தரிசனம் செய்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை தரிசித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.