புதுச்சேரி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா உட்கட்சி பிரச்சனை என்று நாடகமாடுகிறார்கள்- இந்திய கம்யூனிஸ்டு கண்டனம்

Published On 2024-07-10 05:15 GMT   |   Update On 2024-07-10 05:16 GMT
  • என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா அரசை அகற்றி, மக்கள் நலன் காக்கும் அரசை அமைக்க தொடர்ந்து போராடுவோம்.
  • புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு அளிக்கும்

புதுச்சேரி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாக குழு கூட்டம் முதலியார்பேட்டை, கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கட்சியின் மாநில செயலாளர் அ.மு.சலீம் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தேர்தல் தோல்வியை மறைக்க என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா உட்கட்சி பிரச்சனை என்று நாடகமாடுகிறார்கள் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது.

ஆட்சி ஆளும் தார்மீக உரிமையை இழந்துள்ளது. எதிர்காலத்தில் இந்த மக்கள் விரோத என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா அரசை அகற்றி, மக்கள் நலன் காக்கும் அரசை அமைக்க தொடர்ந்து போராடுவோம்.

மக்களை பாதிக்கின்ற 3 குற்றவியல் சட்டங்களை அமுல்படுத்த வேண்டாம் என்றும் அதற்காக போராடும் புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு அளிக்கும்

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News